சென்னை போலீஸ் கமிஷனரிடம் "டிரிங்.. டிரிங்" மூலம் குறை கூறலாம்!
சென்னை:
சென்னை மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் நகர போலீஸ் கமிஷனரிடம் நேரடியாகதொலைபேசி மூலம் புகார் கூறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் விஜயக்குமாரிடம் நேரடியாக புகார் கூற விரும்பும் பொதுமக்கள் இனிமேல் அவரை நேரில்காண வர வேண்டியதில்லை. தொலைபேசியிலேயே தங்களது புகார்கள், குறைகளைத் தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை இந்ததொலைபேசி வசதி செயல்படும்.
சனிக்கிழமைகளில் முற்பகல் 11 மணி தல் 12 மணி வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை இந்த வசதி கிடையாது.
மேற்கண்ட நாட்கள் மற்றும் நேரத்தில் 8555064 என்ற தொலைபேசி எண்ணில் சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
இதுதவிர ஈ-மெயில் மூலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[email protected] என்ற ஈ-மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தங்கள் குறைகளைஅனுப்பி வைக்கலாம் என்று சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications