மதமாற்ற தடை சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி பேரணி
சென்னை:
கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ஆதரித்தும், அதைக் கொண்டு வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிதெரிவித்தும் இந்து முன்னணி சார்பில் இன்று சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் தலைமையில் இந்த பேரணி நடந்தது.
பேரணியின் முடிவில் "மதமாற்றம்-தேசிய அபாயம்" என்ற தலைப்பிலான புத்தகத்தை ராம. கோபாலன் வெளியிடபா.ஜ.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏவான ராஜா அதைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் ராம. கோபாலன் தலைமையிலான குழுவினர் ஜெயலலிதாவைச் சந்தித்து மதமாற்ற தடுப்புச் சட்டத்தைக்கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதற்கிடையே இந்தச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மையினர் நாளை நடத்தும் போராட்டத்தின் போது அவர்கள்நடத்தும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ஜெயலலிதாவிடம் நிருபர்கள்கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, அரசு உதவி பெறும் எந்தக் கல்வி நிறுவனத்தையும் அரசின் அனுமதியின்றி மூடமுடியாது என்றார்.












Click it and Unblock the Notifications