For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதையில் மாணவிகளிடம் குறும்பு: ஆசிரியர் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

குடியாத்தம்:

குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளைக் குறும்பு செய்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

குடியாத்தம் அருகே உள்ள வளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக இருப்பவர்செல்வராஜ் (45).

இவர் அடிக்கடி நன்றாகக் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவது வழக்கம். அப்படி வரும் போது அவர் எங்கே பாடம்நடத்தப் போகிறார்? கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசுவதோடு நில்லாமல், மாணவிகளிடம் குறும்பும்செய்வார்.

அதேபோல் தான் சமீபத்தில் நன்றாகக் குடித்து விட்டு பள்ளிக்கு வந்தார் செல்வராஜ். வழக்கம் போல்மாணவிகளிடம் தன் கைவரிசையைக் காண்பித்துள்ளார்.

உடனடியாக மாணவிகள் வீட்டுக்குச் சென்று தங்களுடைய பெற்றோர்களிடம் புகார் செய்தனர். கொதித்துப் போனபெற்றோர்கள் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் செல்வராஜ் குறித்துப் புகார் செய்தனர்.

அப்போதும் செல்வராஜ் "ஃபுல் போதையில்" வந்திருந்தார். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சேர்ந்துஅவரை ஒரு அறையில் பூட்டி வைத்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அதிகாரி செந்தமிழ் செல்வி தீவிர விசாரணை நடத்தினார். மாணவிகளின் பெற்றோர் அளித்தபுகார் மட்டுமில்லாமல் செல்வராஜ் குடியோதையில் இருப்பதை நேரடியாகவே பார்த்த செந்தமிழ் செல்வி, அவரைஉடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பாக இலாகாபூர்வமான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X