For Daily Alerts
Just In
மின்வாரிய மீட்டர் ரீடிங் ஊழியர்கள் புறக்கணிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதிலும் 23ம் தேதிதொடங்கவுள்ள அரசு ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மின்வாரியமீட்டர் ரீடிங் ஊழியர்கள் சங்கம் கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் செயலாளர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எங்களது வழக்கமான பணிகள் தொடரும். எங்களது சங்கத்தைச் சேர்ந்த 6,000 ஊழியர்களும் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ள மாட்டார்கள்.
இருப்பினும், அரசு ஊழியர்களின் ஊதிய மாற்ற நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாகமேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே மூன்று சங்கங்கள் அறிவித்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, October 23, 2002, 5:30 [IST]