போக்குவரத்து ஊழியர்களும் ஒருநாள் ஸ்டிரைக்: பஸ்கள் ஓடவில்லை
சென்னை:
அரசு ஊழியர் ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தெரிவித்து போக்குவரத்துக் கழக ஊழியர்களும் இன்று ஒருநாள் மட்டும்வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை
போக்குவரத்துக் கழக மற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.2,500 வரை அவர்களுக்கு போனஸ் கிடைக்கும்.
ஆனால் இந்த போனஸ் தொகை தங்களுக்குப் போதாது என்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அதிருப்தியுடன்கூறியுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகஅவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று தொடங்கியுள்ள காலவரையற்ற போராட்டத்திற்குபோக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று ஒருநாள் மட்டும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு பஸ்கள் ஓடவில்லை. அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள்இதில் கலந்து கொள்ளாததால் சில பஸ்கள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
சென்னையில் பெரும்பாலான பஸ்கள் ஒடவில்லை. முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.
அரசு பஸ்கள் ஓடாததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தனியார் மற்றும் மினி பஸ்கள்களத்தில் குதித்துள்ளன. அரசு பஸ்கள் ஓடாத ரூட்களில் இந்த பஸ்கள் இயங்குகின்றன.
இதற்கிடையே 20 சதவீத போனஸ் தொகையை அரசு அறிவிக்காவிட்டால், தீபாவளிக்கு முன்பாகவேகாலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்எச்சரித்துள்ளனர்.