தமிழ் பட தியேட்டருக்கு தீ வைப்பு, பிலிம் ரோல் எரிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ் படம் திரையிட்ட ஒரு தியேட்டரின் ஸ்கிரீனை கன்னட வெறியர்கள் சிலர் எரித்தனர். அந்தப்படத்தின் திரைச் சுருளையும் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
ஆர்.டி. நகர் பகுதியில் "ஜெயலட்சுமி" என்ற டூரிங் டாக்கீஸ் உள்ளது. கன்னட வெறியர்களின் மிரட்டலையும் மீறிஇந்தத் தியேட்டரில் ரஜினியின் மனிதன் தமிழ்ப் படம் திரையிடப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதைக் கேள்விப்பட்ட 20 கன்னட வெறியர்கள் கொண்ட ஒரு கும்பல் இந்தத் தியேட்டருக்குள் புகுந்தனர்.
நுழைந்த வேகத்தில் அங்கிருந்த திரைச் சீலைக்கு அவர்கள் தீ வைத்தனர். இதனால் அது எரிந்து சாம்பலானது.அப்போது அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இதைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு வெளியேஓடினர்.
பின்னர் நேரடியாக ஆபரேட்டர் அறைக்குள் சென்ற அந்தக் கும்பல் அங்கிருந்த ஒரு திரைப்படச் சுருளையும்பறித்துக் கொண்டு அதையும் தீயிட்டுக் கொளுத்தியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தியேட்டரின் அதிபரையும் அவர்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் தியேட்டரில் நிறுத்தப்பட்டிருந்த ஒருஸ்கூட்டரையும் அந்தக் கும்பல் எரித்தது.
இதற்குள் போலீசாருக்குத் தகவல் போய், அவர்களும் தியேட்டருக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்தக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.
சில நாட்களுக்கு முன்னால் ரஜினி நடித்த "மனிதன்" என்ற தமிழ்ப் படம் ஓடிக் கொண்டு தான் இருந்தது. ஆனால்இன்று தெலுங்குப் படம் தான் திரையிட்டிருந்தோம். அந்தக் கும்பலிடம் எவ்வளவோ கூறியும் அவர்கள் அதைக்கேட்காமல் தீவைத்து விட்டனர் என்று "ஜெயலட்சுமி" தியேட்டரின் அதிபர் கூறினார்.
தமிழர்கள் போராட்டம்:
இதற்கிடையே கர்நாடகத்தில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து பெங்களூர் தமிழ்ச் சங்கத்தலைவர் க.சுப்பிரமணியம் தலைமையில் பல்வேறு தமிழ் அமைப்பினர் வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்களை மீண்டும் ஒளிபரப்பக் கோரியும், தமிழ் படங்களைத் திரையிடக் கோரியும்தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
மகாத்மா காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டுபோராட்டம் நடத்தினர்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழர்களும் ஏராளமானஅளவில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் பிரச்சனை தீராவிட்டால், ஒரு லட்சம் தமிழர்களைத் திரட்டிக் கொண்டு பெரும்போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள் அறிவித்தன.
-->












Click it and Unblock the Notifications