பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஸ்டிரைக்: தொலைபேசி, இன்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நகாம் லிமிடெட் நிறுவன) அதிகாரிகள் மற்றும்பொறியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக தொலைத் தொடர்பு சேவைகள் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் வேலைநிறுத்தம்மேற்கொண்டுள்ளனர். 3 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
3-வது நாளான வெள்ளிக்கிழமையும் அவர்களது போராட்டம் தொடர்ந்து. இதனால் சென்னை, கோவை, மதுரைஉள்ளிட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு வசதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
சென்னையில் இன்டர்நெட், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன. தி.நகர்,அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு வசதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் தவிர நாட்டின் பிற பகுதிகளிலும் இந்தச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications