விழுப்புரம் பட்டாசு விபத்து: சாவு 13 ஆனது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் ஒரு தொழிற்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 10 பேர்சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மறுநாள் மருத்துவமனையில்உயிரிழந்தனர்.
இந்நிலையில் காயமடைந்து பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்றுஅதிகாலை இறந்தார்.
இதற்கிடையே, தலைமறைவாகி இருந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் செல்வமூர்த்தியைப் போலீசார்கைது செய்தனர். திருபுவனை அருகே அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications