ஓமலூர் விஷக் காய்ச்சல்: மேலும் ஒரு பெண் பலி
சேலம்:
ஓமலூர் வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் இறந்தார். இதையடுத்து இந்தக் காய்ச்சலுக்கு இறந்தவர்களின்எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மூவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம் ஓமலூர் (சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலையின் தொகுதி) அருகே உள்ள புதுக்கடை காலனிபகுதியில் கடந்த வாரம் இரண்டு பெண்கள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.
இந்தப் பகுதி முழுவதுமே வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. முதலில் இது விஷக் காய்ச்சல் என்று கூறப்பட்டது.பின்னர் டெங்கு என்றும் கூறப்பட்டது. ஆனால் எலிகளால் தான் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியது என்றுகடைசியாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் புதுக்கடை காலனியைச் சேர்ந்த இளவரசி என்ற 20 வயதுப் பெண் இந்தக் காய்ச்சலால்பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்இறந்தார்.
இதையடுத்து அவருக்கு சரியான சிகிச்சை தரப்படவில்லை என்று கூறி அவரது உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்தஉறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுவரை 44 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் சேலம் மருத்துவமனையிலும்மற்றவர்கள் ஓமலூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications