For Daily Alerts
Just In
பெங்களூர் ஐ.டி.காம்: திங்கள்கிழமை தொடங்குகிறது
பெங்களூர்:
ஆசியாவின் மிகப் பெரிய தகவல் தொழிலநுட்பக் கண்காட்சியான பெங்களூர் ஐடி.காம் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.
17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாப்ட்வேர் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
இந்த 5 நாள் கண்காட்சியை ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைக்கிறார். கர்நாடக அரசும் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப்இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.
கடந்த ஆண்டு நடந்த இந்தக் கண்காட்சியை இந்தியா உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த 2.45 லட்சம் பேர் கண்டுகளித்தனர். 250 மில்லியன்டாலர் அளவுக்கு வர்த்தகமும் நடந்தது. இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் 11 மாநில அரசுகளும் இதில் பங்கேற்க உள்ளன.
Story first published: Friday, October 25, 2002, 5:30 [IST]