மண்டியாவில் விவசாயிகள் சாலை மறியல்: கபினி அணை முற்றுகை
மண்டியா:
தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத்தொடர்ந்து மண்டியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மீண்டும் துவக்கிவிட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியின் இயல்புவாழ்க்கையையே ஸ்தம்பிக்கச் செய்திருந்தனர். கடந்த வாரம் தான் அங்கு நிலைமை சீரானது.
இந்நிலையில் மண்டியா மாவட்டத்தின் இன்டவலு மற்றும் யாழியூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள்மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவைக் கேட்டு முதல்வர் கிருஷ்ணா பின் வாங்கி விடக் கூடாது என்று கூறிய விவசாயிகள்தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடக் கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் பெங்களூர்-மைசூர் இடையேயான சாலைப் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விவசாயிகளை அமைதிப்படுத்தினர். அதன் பின்னர் அவர்கள்சாலை மறியலைக் கைவிட்டனர். போக்குவரத்தும் சீரானது.
இதற்கிடையே கபினி அணையின் முன் பகுதியிலும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். ஆனாலும் அவர்களால்அணையின் உள் பகுதிக்குச் செல்ல முடியவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த உடனேயே கபினி அணையில் ஏராளமான அதிரடிப் போலீசார் குவிக்கப்பட்டுவிட்டனர்.
இதனால் கபினி அணையின் முன் பகுதியை மட்டும் விவசாயிகள் முற்றுகையிட்டு தமிழகத்திற்கு எதிராகக்கோஷங்களை எழுப்பினார்கள்.
அவர்கள் இன்னும் தொடர்ந்து அங்கேயே இருந்த கொண்டு, அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர்திறந்துவிடப்படுகிறதா என்பதைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சொட்டு நீர் திறந்துவிடப் பட்டாலும் கூட அந்த விவசாயிகள் போராட்டத்தில் மேலும் தீவிரமாகக் குதிப்பார்கள்என்று தெரிகிறது.
கபினி அணை தவிர கே.ஆர். சாகர் உள்ளிட்ட மற்ற அணைப் பகுதிகளிலும் போலீசார் தீவிரப் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications