அதிமுக அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம்: எதிர்க் கட்சிகள் முடிவு
சென்னை:
அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறி எதிர்க் கட்சிகள் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.இதற்கான தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்துவிடம் எதிர்க் கட்சிகள் வழங்கியுள்ளன.
வரும் 31ம் தேதி இந்த கண்டனத் தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபை செயல் கமிட்டியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்துக்கு நீர் விடுமாறு உச்ச நீதிமனறம் உத்தரவிட்டுள்ளதால் காவிரி மீதானவிவாதத்தை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. (முதலில் சட்டசபையில் 28ம் தேதி இந்த விவாதம் நடக்கும்என சபாநாயகர் அறிவித்திருந்தார்).
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து உடனே காவிரியில் கர்நாடகம் நீர் விட வேண்டும். இதில் கால தாமதம் செய்யக் கூடாது என்றார்துரைமுருகன்.