வலுவிழந்தது புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் வலுவிழந்ததால், வட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த புயல் சின்னம் வலுவிழந்தது. இதைத் தொடர்ந்து ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் வடபகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், தென் மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நாகர்கோவிலில் 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடானது. இதில் ஒரு தனியார்கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்தது. அதன் அருகில் இருந்த நான்கு வீடுகள் சேதமடைந்தன.
தேனி, மதுரை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications