For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒருவழியாய் கண்ணைத் திறந்தது அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை நிறுத்தியதால் விற்பனை இன்று பாதிக்கப்பட்ட நெசவாளர்களிடம்இருந்து 18 லட்சம் சேலைகளையும் வேட்டிகளையும் அரசு வாங்கியுள்ளதாக நிதியமைச்சர் பொன்னையன் சட்டசபையில்தெரிவித்தார்.

ஏழைகளுக்கு இலசவ வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை அரசு ரத்து செய்தது. இதனால் நெசவாளர்கள் தாங்கள் நெய்தஉடைகளை விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் அரை பட்டினியால் வாடி வருகின்றனர்.

இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. ஆங்காங்கே அவர்களுக்கு இலவச உணவு வழங்க கஞ்சித் தொட்டிகள்திறக்கப்பட்டன.

இந் நிலையில் அவர்களிடம் குவிந்து கிடக்கும் வேட்டி, சேலைகளை அரசு வாங்கி வருவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

சட்டசபையில் அவர் கூறுகையில்,

இதுவரை 18 லட்சம் வேட்டி, சேலைகள் நெசவாளர்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 25 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் வட்டியைத் தள்ளுபடி செய்யவும் ரூ. 27.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X