பெங்களூர்-மைசூர் ரயில்கள் ரத்து: தஞ்சை ரயில் பாதியில் நிறுத்தம்
பெங்களூர்:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர்-மைசூர் இடையே ரயில்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைசூர் மற்றும் மண்டியா மாவட்டங்களில் கடந்த மாதம் விவசாயிகள் போராட்டத்தின் போது பல ரயில்கள்தாக்கப்பட்டன.
குறிப்பாக தமிழகத்திலிருந்து வரும் ரயில்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. சில ரயில் என்ஜின்களுக்குத் தீயும்வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெங்களூர்-மைசூர் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் கடந்த வாரம்தான் இந்தப் பாதையில் ரயில்கள் மீண்டும் ஓடத் தொடங்கின.
இந்நிலையில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து மைசூர் மற்றும் மண்டியா மாவட்டங்களில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்றுதெரிகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர்-மைசூர் இடையே ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்கதென்னக ரயில்வே முடிவி செய்தது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்திலிருந்து மைசூர் நோக்கிச் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்துமே பெங்களூருடன்நிறுத்தப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சதாப்தி எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி விரைவு ரயில் ஆகியவைபெங்களூருடன் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்தே மீண்டும் திரும்பிச் செல்லும் என்று தென்னக ரயில்வேஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ரயில்கள் மைசூர் செல்லாது என்றார்.
-->
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications