Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகத்துக்கு சாட்டை அடி தந்துள்ளது உச்ச நீதிமன்றம்: கி.வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி விஷயத்தில் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை திராவிடர் கழகச் செயலாளர்கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்துக்கு துரோகம் செய்த கர்நாடகத்துக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நிஜமாகவே சாட்டை அடி கொடுத்துள்ளது.

நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு ஆளான கர்நாடக அரசும், மத்திய அரசும் ஆட்சியில் தொடர எந்த உரிமையும்இல்லை.

இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.இனிமேலாவது திருந்தி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயல வேண்டும். மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரம் என்னஎன்பதை வாஜ்பாயும் அவரது அமைச்சர்களும் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் செயல் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு ஆரம்பம் முதலே எடுத்த நடவடிக்கைகள் சரியானவைஎன்பது தெளிவாகிவிட்டது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்.

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+