Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யா: 32 தீவிரவாதிகளை கொன்று பணய கைதிகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

மாஸ்கோ கலை அரங்கம் ஒன்றில் கடந்த 3 நாட்களாக சுமார் 800 பேரை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு ரஷ்ய அரசை மிரட்டிவந்த 36 செசன்ய தீவிரவாதிகளை சிறப்புப் படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.

இத் தாக்குதலில் 90 பணயக் கைதிகளும் பலியாயினர்.

கடந்த புதன்கிழமை இந்த அரங்கத்திற்குள் நுழைந்த 50 செசன்ய தீவிரவாதிகள் அங்கிருந்த பார்வையாளர்கள் 800 பேரையும் பயணக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

செசன்யாவில் இருந்து ரஷ்ய ராணுவத்தினரை உடனே திரும்பப் பெற வேண்டும், இல்லாவிட்டால் அனைத்து பணயக் கைதிகளையும்கொன்றுவிடுவோம் என மிரட்டி வந்தனர்.

அவர்களுடன் ரெட்கிராஸ் உள்ளிட்ட அமைப்புகள் பேச்சு நடத்தி 8 குழந்தைகளை மீட்டனர். மேலும் சில நேயாளிகளையும் மீட்டுவந்தனர்.

ஆனால், படைகளை வாபஸ் பெறாவிட்டால் சனிக்கிழமை காலை முதல் அனைத்து பணயக் கைதிகளையும் சுட்டுக் கொல்லப் போவதாகதீவிரவாதிகள் கூறியிருந்தனர். அவர்கள் தங்கள் உடல்களில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்தனர். மேலும் பணயக் கைதிகள் பலர் மீதும்குண்டுகளைக் கட்டி வைத்தனர்.

தீவிரவாதிகளை பாதுகாப்புடன் வெளியேற அனுமதி தருவதாகவும் பணயக் கைதிகளை உடனே விட்டுவிடும்படியும் ரஷ்ய அதிகாரிகள்பேச்சு நடத்திப் போர்த்தனர். ஆனால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

அந்த அரங்கத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான ரஷ்ய சிறப்பு அதிரடிப்படையினர் தயார் நிலையில் இரவும் பகலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் விதித்திருந்த கெடு முடிவடைந்தது. இதையடுத்து ஏற்கனவே மிரட்டியிருந்தபடி பணயக்கைதிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்ல ஆரம்பித்தனர். இரு பணயக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்ட மறு வினாடியே ரஷ்ய அதிரடிப்படை வீரர்கள் புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தனர். அந்தக்கட்டதத்துக்குள் தூக்க வாயுவை செலுத்திய படையினர் ஒரு பக்க சுவரை குண்டு வைத்து தகர்த்துக் கொண்டு உள்ளே சென்றுதீவிரவாதிகளை சுற்றி வளைத்து சுட்டனர். இதில் 32 தீவிரவாதிகள் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களை சுட்டுக் கொண்ட பணயக் கைதிகளையும் பாதுகாப்பாக ரஷ்ய வீரர்கள் வெளியேற்றினர். இதனால் 750 பணயக் கைதிகள்உயிருடன் தப்பிவிட்டனர்.

ஆனால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையில் சுமார் 90 அப்பாவி பணயக் கைதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

40 நிமிடத்தில் அதிரடித் தாக்குதலை நடத்தி பணயக் கைதிகளை ரஷ்யப் படைகள் மீட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச்சண்டையின்போது சில தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டதாகவும் தெரிகிறது. மேலும் சிலர் பிடிபட்டுள்ளனர்.

இப்போது அந்த கலை அரங்கில் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளையும், கண்ணி வெடிகளையும் செயல் இழக்கச்செய்யும் பணியில் ரஷ்யப் படைகள் ஈடுபட்டுள்ளன.

செசன்ய தீவிரவாதிகளுக்கு அல்-கொய்தாவின் உதவியும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியும் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. செசன்யாவில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கியதால் ரஷ்யாவுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு தீவிரவாதிகளை ஒடுக்க தனது படைகளை அனுப்பியது ரஷ்யா.

கலை அரங்கில் நுழைந்த தீவிரவாதிகளின் தலைவன் மொவ்ஸார் பாராயேவும் கொல்லப்பட்டுவிட்டான்.

தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலையடுத்து செசன்யாவில் மிகக் கடுமையாக தாக்குதலை ரஷ்யா துவங்கியுள்ளது. செசன்ய தீவிரவாதிகள்விஷயத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா முழு ஆதரவு தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+