சென்னை பல்கலை. தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழகதேர்வுகள் தற்போது மீண்டும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்படுவதை எதிர்த்து அக்கல்லூரிகளின் ஆசிரியர்களும்மாணவர்களும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் அவற்றையெல்லாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத அரசு, பல்கலைக்கழங்களுடன் அரசுக்கல்லூரிகளை இணைப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவைப் பெற்று, சமீபத்தில் அரசாணை ஒன்றையும்பிறப்பித்து விட்டது.

இதையடுத்து பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்பட்டும் விட்டன. இனிமேலும்போராட்டம் நடத்துவதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக்கைவிட்டு விட்டனர். மாணவர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

இதற்கிடையே ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம் அக்டோபர் 17ம் தேதிதொடங்கவிருந்த தேர்வுகளை அக்டோபர் 28ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தது.

இளநிலை மற்றும் முதுநிலை கலை, அறிவியல் (செமஸ்டர் அல்லாத) வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தான்நாளை தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில் நாளை தொடங்கவிருந்த இந்தத் தேர்வுகள் அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகளுக்கான கால அட்டவணையை அந்த அந்தக் கல்லூரிகளில் நாளை சென்று தெரிந்து கொள்ளலாம்என்று சென்னைப் பல்கலைக்கழக தேர்வாணைய அதிகாரி கருணாநிதி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+