மாறனுக்கு சாதனையாளர் விருது
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனுக்கு "அமைதியாகச் செயல்படும் சாதனையாளர்" விருதுவழங்கப்படுகிறது.
"வீ திங்க் பார் இந்தியா" என்ற ஒரு அமைப்பு ஆண்டுதோறும் இதுபோன்ற விருதை வழங்கி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு "இந்தியாவின் அமைதியாகச் செயல்படும் சாதனையாளர் மற்றும் சிந்தனையாளர்" (IndiasSilent Performer and Thought Leader) என்ற விருதை மாறனுக்கு வழங்க இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
உலகமயமாக்குதல் மற்றும் கடுமையான போட்டிகள் நிறைந்த இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் தொழில்மற்றும் வர்த்தகத் துறையை உலகத் தரத்திற்கு இணையாகக் கொண்டு சென்றதற்காக இந்த விருது மாறனுக்குஅளிக்கப்படுவதாக அவ்வமைப்பு கூறியுள்ளது.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் விரைவில் நடைபெறும் விழாவில்மாறனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
செயற்கை இருதய வால்வில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மாறன் தற்போதுசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications