முழு வீச்சில் வடகிழக்கு பருவமழை: நனைகிறது தமிழகம்
சென்னை:
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் மழை வடகிழக்குப் பருவமழையாக மாறியுள்ளது.
தமிழகத்தின் வடகிழக்குத் திசையில் வங்கக் கடலில் சமீபத்தில் புயல் சின்னம் தோன்றியது. கடந்த இரண்டுநாட்களுக்கு முன் அது வலுவிழந்ததைத் தொடர்ந்து தமிழகம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழைபெய்யத் தொடங்கியது.
ஆனாலும் தமிழகத்தில் தான் மழை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடலோரமாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது.
புயல் சின்னத்தைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிவிட்டது. இதனால் மழை தொடர்ந்துநீடிக்கும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
துறையூரில் நேற்று 4 செ.மீ. மழையும், பெரம்பலூர், வள்ளம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அதேபோல் சீர்காழி, அவினாசியில் 2 செ.மீ. மழையும், சங்கரன்கோவில், வால்பாறை, பொள்ளாச்சி ஆகியஇடங்களில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications