Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகர் கோவில் காம்பவுண்ட் சுவர் இடிந்து 2 மாணவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே உள்ள புகழ்பெற்ற அழகர் கோவிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள்உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலைச் சுற்றிலும் பிரம்மாண்டமான சுற்றுச் சுவர்கள்எழுப்பப்பட்டுள்ளன.

நேற்று மாலை ஒரு சுற்றுச் சுவரின் அருகே நான்கு மாணவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சுற்றுச் சுவரின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் அந்த நான்கு மாணவர்களுமேஇடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த நான்கு மாணவர்களையும் மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர்.

மற்ற இரண்டு மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனத்த மழை காரணமாகவே அந்தச் சுவர் இடிந்து விழுந்ததாகக்கூறப்படுகிறது.

புராதன சிறப்பு வாய்ந்த அழகர் கோவிலையும் அதன் சுற்றுச் சுவர்களையும் புதுப்பித்து பராமரிக்க வேண்டும்என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தச் சுவர்களைச்சுற்றியும் பெரிய பெரிய மரங்களும் புதர்களும் வளர்ந்ததால் தான் சுவர் இடிந்து விழுந்துள்ளது என்றும்அம்மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்ட போலீசார், கோவிலின் சுற்றுச் சுவர்களை சிறுநீர் கழிப்பதற்காகப்பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+