தொடர்ந்து 5 முறை கொள்ளையடிக்கப்பட்ட தபால் நிலையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள பம்மல் பகுதியில் ஒரு தபால் நிலையத்தில் தொடர்ந்து 5 முறை கொள்ளைச் சம்பவங்கள்நடந்துள்ளன.
பம்மல் - சங்கர் நகர் பகுதியில் தபால் நிலையம் உள்ளது.
இந்த தபால் நிலையத்தின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்தபணப்பெட்டியை உடைத்து அதிலிருந்த பணத்தை அள்ளிச் சன்றனர்.
இந்த தபால் நிலையத்தில் கொள்ளை நடப்பது இது 5வது முறையாகும். ஆனாலும் இதுவரை ஒரு முறை கூடகொள்ளையர்கள் பிடிபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் புறநகர்ப்பகுதியான பம்மலில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருவதாக அப்பகுதிமக்கள் புலம்புகிறார்கள்.
ஒரு தெருவில் ஒரே வாரத்தில் ஆறு முறை கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் அப்பகுதி மக்கள்தெரிவித்தனர்.
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடிக் கொண்டு தான் உள்ளனர்.












Click it and Unblock the Notifications