பள்ளிகளை மூடியது ஏன்?- அரசிடம் சிறுபான்மை அமைப்புகள் விளக்கம்
சென்னை:
மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து தாங்கள் நடத்தி வந்த கல்வி நிறுவனங்களை மூடியதில் விதிமுறைகள்மீறப்படவில்லை என்று மாநில கல்வி இயக்குநருக்கு சிறுபான்மை அமைப்புகள் விளக்கமளித்துள்ளன.
தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து கடந்த 24ம் தேதிகிருஸ்தவ, முஸ்லீம் மத அமைப்பினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அன்றைய தினம் தாங்கள் நடத்தி வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளையும் சிறுபான்மை அமைப்புகள் மூடிவிட்டன.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அந்தக் கல்வி நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து இது தொடர்பாக அந்த சிறுபான்மை இனப் பள்ளிகளின் சார்பில் கல்வி இயக்குநருக்கு அவர்கள்பதில் அளித்துள்ளனர்.
மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்ட நாளன்று தாங்கள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களைமூடியதில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று அவை விளக்கமளித்துள்ளன.