திருச்சியில் தண்டவாளம் உடைந்தது: ரயில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்டவாளம் உடைந்து விட்டதால் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் ஸ்ரீரங்கத்திற்கு அருகே சரக்கு ரயில் வந்தபோது, தண்டவாளம் அமுங்குவது போல டிரைவர்உணர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து ரயிலை அவர் நிறுத்தி விட்டுப் பார்த்தபோது, தண்டவாளம் உடைந்திருந்ததுதெரிய வந்தது.
உடனே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் விரைந்து வந்து உடைந்த தண்டவாளத்தை சரிசெய்யும் பணியை துவக்கினர்.
இதனால் திருச்சி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கத்திலேயே நிறுத்தப்பட்டது.
தண்டவாளம் சரி செய்யப்பட்ட பின்னர் ரயில்கள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications