கே.ஆர். சாகர் அணையை கைப்பற்ற விவசாயிகள் முயற்சி
மைசூர்:
தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப் பட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ண ராஜ சாகர் அணையை முற்றுகையிடச் சென்ற100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் புட்டனய்யா தலைமையில் அணையை நோக்கி ஊர்வலம் சென்றனர்.
அந்த அணையைக் கைப்பற்றி நீர் திறந்துவிடப் படுவதை நிறுத்துவோம் என்று ஏற்கனவே அவர்கள் அறிவித்தபடிதான் சென்று கொண்டிருந்தனர்.
ஆனால் அணையை நெருங்குவதற்கு முன்பாகவே அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இருந்தாலும் விவசாயிகள் கோஷம் போட்டவாறே அங்கிருந்த ஒரு பஸ்சுக்குத் தீ வைத்தனர். இதையடுத்து அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரும் அருகில் உள்ள கிராமத்தினரும் உடனடியாகத் தீயை அணைத்து பஸ்சில் உள்ளவர்களையும்வெளியேற்றினர்.
இதற்கிடையே மூன்று விவசாயிகள் திடீரென்று அணையை நோக்கி ஓடினர். அணையில் விழுந்து தற்கொலைசெய்து கொள்ளப் போவதாகக் கூறிக் கொண்டே அவர்கள் ஓடினார்கள்.
ஆனால் போலீசார் அவர்களைத் துரத்தி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். இவர்களைத் தவிர மேலும்நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே மைசூர், ஸ்ரீரங்கப்பட்டணம் போன்ற இடங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதைக் கண்டித்து மைசூர் அரண்மனைக்குள் நுழைய முயன்ற 10 பேரைபோலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கபினி அணையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் முகாம் போட்டுள்ளனர். இங்கிருந்துதமிழகத்திற்கு நீர் திறந்துவிடப் பட்டால் அதை உடனடியாகத் தடுப்போம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி கைதான மண்டியா மாவட்ட விவசாயிகள்போராட்டக் குழுத் தலைவர் மாடே கவுடா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆத்மானந்தா உள்ளிட்ட 16 பேரை நீதிமன்றக்காவலில் வைக்க மண்டியா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மீறிப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டஅவர்களை வரும் நவம்பர் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துஅவர்கள் அனைவரும் பெங்களூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-->
-
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!












Click it and Unblock the Notifications