""திமுகவினர் திருடர்களா?""- கருணாநிதிக்கு பா.ஜ.க. கேள்வி
திருச்சி:
இந்துக்கள் திருடர்கள் என்றால் திமுகவில் உள்ள இந்துக்களும் திருடர்களா என்று பா.ஜ.கவைச் சேர்ந்த மத்தியஇளைஞர் நலத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
"இந்து" என்றால் "திருடன்" என்று வியாக்கியானம் கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அப்படி என்றால் திமுகவில் உள்ள இந்துக்கள் அத்தனை பேரும் திருடர்கள் என்று கருணாநிதி கூறுகிறாரா?
எதைக் கூறினாலும் யோசித்துக் கூற வேண்டும். அடுத்தவர்களின் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம் தவறு. வேறு எந்த மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிகொடுக்கப்படாத நிலை உள்ளது.
ஆனால் தமிழகத்தில் 4 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பெருமையுடன் பெற்றுக் கொண்டுஅரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.
தீபாவளி நேரத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பது அழகல்ல. அரசின் நிதி நிலை தெரிந்தும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நியாயமற்றது என்றார் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications