கர்நாடகத்துக்கு மன்னிப்பு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
டெல்லி:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கர்நாடக அரசு அவமதித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இன்று கர்நாடக மாநிலம் உதயமான தினமான ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்பு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு செப்டம்பர் 3, அக்டோபர் 4ம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகஅரசு மதிக்கவில்லை. நீரைத் திறந்துவிடாமல் பாத யாத்திரை நடத்தி நீதிமன்றத்துக்கே சவால் விட்டார் முதல்வர் கிருஷ்ணா.
இதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. இதனை விசாரித்த நீதிபதிகள் கர்நாடகத்துக்கு கடும் கண்டனம்தெரிவித்தனர்.
உடனே தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட வேண்டும், விவசாயிகள் எதிர்ப்பார்கள் என்றெல்லாம் சாக்குபோக்கு சொல்லக் கூடாதுஇதைச் செய்யத் தவறினால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும் கர்நாடக அரசுநீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
நவம்பர் 1ம் தேதி (இன்று) வரை கர்நாடகத்துக்கு அவகாசம் தந்திருந்தனர். இதையடுத்து மன்னிப்பு கோரி கர்நாடகம் மனுதாக்கல் செய்தது.
தமிழகத்துக்கு கடந்த 4 நாட்களாக நீரையும் திறந்துவிட்டுள்ளது. இந்த நீர் தமிழக, பாண்டிச்சேரி விவசாயிகளுக்குப் போய்ச்சேர்ந்ததா, மேட்டூருக்கு எவ்வளவு நீர் வந்து சேர்ந்தது ஆகிய விவரங்களை இன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தாக வேண்டும்.
இதன் பின்னர் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. தமிழகத்தின் குறுவை மற்றும் சம்பா பயிர்களை நாசம் செய்தகர்நாடகத்துக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது என தமிழக அரசு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
13 ஆண்டு கோமா.. 32 வயது இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. நாட்டிலேயே முதல் முறை -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!












Click it and Unblock the Notifications