சோனியாவின் குடியுரிமை: சு.சுவாமி சந்தேகம்
டெல்லி:
தனது கல்வித் தகுதி, குடியுரிமை, பெயர் போன்ற விஷயங்களில் இந்திய மக்களை சோனியா காந்தி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், இத்தாலிய தூதரத்திடம் தனது இத்தாலிய குடியுரிமையைத் திருப்பித் தந்த சோனியா காந்திஅங்கு வாங்கிய சான்றிதழைக் கொண்டு இந்திய குடியுரிமையைப் பெற்றார்.
இதுவே பெரிய தவறாகும். உண்மையிலேயே தனது இத்தாலிய குடியுரிமையை அவர் விட்டுவிட விரும்பியிருந்தால் அதை இத்தாலியஅரசிடம் தான் எழுதி வாங்கியிருக்க வேண்டும். இத்தாலிய தூதரகத்திடம் ஒரு லெட்டர் வாங்கிக் கொண்டு அவர் திடீரென இந்தியராகமாறிவிட்டார்.
உலகில் எந்தத் தூதரகத்துக்கும் குடியுரிமையைத் தரவோ ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை. தூதரகங்கள் என்பதை போஸ்ட் ஆபிஸ்மாதிரி. அங்கு எப்படி தனது இத்தாலிய குடியுரிமையை சோனியா திருப்பித் தர முடியும்?
இந்த தகவல்களை டெல்லி உயர் நீதிமன்றத்திடம் நான் தெரிவித்துள்ளேன். மேலும் துணைப் பிரதமர் அத்வானிக்கும் இது தொடர்பாககடிதம் எழுதியுள்ளேன்.
சோனியாவின் கல்வித் தகுதிகளிலும் பல சந்தேகங்கள் உள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு விரிவான கடிதம்அனுப்பியுள்ளேன் என்றார் சுவாமி.