For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் மீது அதிமுக புதிய ஊழல் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மழை நீர் வடிகால் வசதி செய்வதாக கூறி ரூ. 25 கோடி அளவுக்கு முன்னாள் சென்னை மேயர் மு.க.ஸ்டாலின்ஊழல் செய்து விட்டதாக நி அமைச்சர் பொன்னையன் புகார் கூறியுள்ளார்.

வட சென்னைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அதிமுக சார்பில்இலவச அரிசி வழங்கப்பட்டது. நிதியமைச்சர் பொன்னையன் இந்தப் பொருட்களை வழங்கிப் பேசினார்.

அவர் கூறியதாவது: சென்னை நகரில் மழை நீர் வடிகால் வசதி செய்வதாக கூறி ரூ. 25 கோடியில் ஸ்டாலின்காலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அந்த பணத்தில் பெரும் முறைகேடு செய்து விட்டார் ஸ்டாலின். ஸ்டாலினின் முறைகேடுகளும், அவரதுஅதிகாரத்தில் நடந்த நிர்வாக சீர்கேட்டினாலும் தான் இந்த மழையின்போது சென்னை நகர மக்கள் பெரும்அவதிக்குள்ளாக நேரிட்டுள்ளது.

திமுகவினரின் முறைகேடுகளால் லட்சோப லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்க வேண்டிய அவல நிலைஏற்பட்டு விட்டது. தூர் வாருகிறோம் என்ற பெயரில் மத்திய அரசு கொடுத்த நிதியையும் சுருட்டிவிட்டார்கள்திமுகவினர் என்றார் பொன்னையன்.

ரூ. 50,000 இழப்பீடு:

இதற்கிடையே, தமிழகத்தில் கன மழைக்குப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவிவழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம்:

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழைக்கு ஏராளமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இதில் பல்வேறு பகுதிகளில் வீடு இடிந்தும், மின்னல் தாக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கார்த்திக்,விமலா, தனம்மாள், சையத் முகம்மது, நிசிமுதீன், மஞ்சு, ஜெரால்டு, பவுன்ராஜ் ஆகியோர் இறந்துள்ளனர்.

இவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 நிதியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.6000 நிதியுதவியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X