வெடித்துச் சிதறிய போலீஸ் நிழற்குடை
சென்னை:
சென்னையில் போலீஸ் நிழற்குடை திடீரென்று வெடித்துச் சிதறியது. அந்த நிழற்குடையில் பட்டாசு அல்லதுவெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்தது. அந்த நெடுஞ்சாலையில், போலீஸ் துணை கமிஷனர்அலுவலகம் அருகே உள்ள நிழற்குடை நேற்றிரவில் திடீரென்று வெடித்துச் சிதறியது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் விஜயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அந்த இடத்தைப்பார்வையிட்டனர்.சிதறிய நிழற்குடை அங்கிருந்து அகற்றப்பட்டது.
நிழற்குடைக்குக் கீழே பட்டாசுகளை யாராவது வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அல்லது விஷமிகள்யாராவது வெடிபொருட்களை வைத்து விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
அல்லது போலீஸ்காரர் யாராவது தீபாவளியை ஒட்டி மாமூல் பட்டாசு வாங்கி அதை நிழற்குடையின் கீழ்வைத்துவிட்டு மறந்துவிட்டுப் போய் அது வெடித்திருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.