ஆளுனர், ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து
சென்னை:
தீபாவளி திருநாளையொட்டி தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராம் மோகன் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளித் திருநாளில் வளம் பல பெற்று,மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், அறியாமை இருள் நீங்கி, ஞானம், அறிவும் சிறந்து விளங்கவும்,அறம் வெல்லும், மறம் தோற்கும் என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலும் இந்த தீபாவளித் திருநாளில், நலம்,வளம் பெற்று தமிழக மக்கள் விளங்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் கிருபாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக மக்கள் எல்லா வளமும் பெற்று வாழவாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவைஆட்டுவிக்கும் பயங்கரவாதம் அகன்று நாட்டில் அமைதி நிலவ இந்த தீபாவளித் திருநாளில் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.