For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கி 6 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

அம்பாலா:

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலியாயினர்.பைலட் பத்திரமாக தரையிறங்கிவிட்டார்.

ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் இந்த விபத்து நடந்தது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் இரு வீடுகள் மீது இந்த விமானம் மோதி வெடித்தது. இதில் இரு வீடுகளுமே தரை மட்டமாயின.அதில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். நேற்று நான்கு உடல்களும் இன்று இரு உடல்களும் மீட்கப்பட்டன.

விமானத்தின் பிளாக் பாக்ஸ் இன்று கட்டிட இடிபாடுகள் இடையிலிருந்து மீட்கப்பட்டுவிட்டது.

விமானத்தை ஓட்டிய பிளைட் லெப்டிணன்ட் ரெஹானி கடைசி நொடியில் பாராசூட் மூலம் குதித்ததால் உயிர் தப்பினார். அவரதுமுதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் மிகத் திறமையான விமானி என்ற பெயர் பெற்றவர். இதனால் விமானக் கோளாறு தான் விபத்துக்குக் காரணமாக இருக்க முடியும் எனவிமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒரு விபத்து தான் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டசும் கூறியுள்ளார். அவர் கூறுகையில், இந்திய விமானப் படையில்உள்ள மிகப் பாதுகாப்பான விமானம் ஜாகுவார் தான். தொடர்ந்து வரும் விமான விபத்துக்கள் குறித்து விவாதிக்க விமானிகள்,பொறியாளர்கள், அதிகாரிகளின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.

மிகக் குறைவான உயரத்தில் பறந்து, ரேடார்களில் இருந்து தப்பி, எதிர் நாட்டின் மீது குண்டு மழை பொழியும் விமானம் இது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X