ஜெ. மீதான விசாரணை மீண்டும் ஆரம்பம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 66.65 கோடி சொத்து சேர்த்த வழக்கில் நீண்டஇடைவெளிக்குப் பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கியது.
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க திமுக ஆட்சி காலத்தில் சிறப்பு நீதிமன்றங்கள்அமைக்கப்பட்டன.
இதில் பல வழக்குகளின் விசாரணை முடிந்துவிட்டதால் 2 நீதிமன்றங்கள் தவிர மற்றவற்றை மீண்டும் ஆட்சிக்குவந்த அதிமுக அரசு கலைத்துவிட்டது.
முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்குவருகிறது. நீதிபதி ராஜமாணிக்கம் விசாரணையை மேற்கொள்கிறார்.
இன்று சாட்சியளிக்க வருமாறு 2 பேருக்கு நீதிபதி ராஜமாணிக்கம் சம்மன் அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர சசிகரா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் ஹோட்டல் வழக்கு:
ரூ. 44 கோடி லண்டன் ஹோட்டல் வழக்கு விசாரணையும் இன்றே விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா, தினகரன், உள்ளிட்டோர்குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும் 2 வழக்குகள்:
வரும் 13ம் தேதி தீயணைப்புப் படை ஊழலும் 14ம் தேதி ஸ்பிக் பங்கு விற்பனை ஊழலும் விசாரணைக்கு வருகின்றன.
-->












Click it and Unblock the Notifications