தமிழகத்தில் மீண்டும் கன மழை
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையில் தீபாவளிக்கு முன் தொடர்ந்து நான்கு நாட்களாக கன மழை பெய்தது. இதையடுத்து நகரின்பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் தத்தளித்தன. இன்னும் கூட பல பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை நகரிலுள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட சாலைகள் சேதமுற்றுள்ளன. வாகனப் போக்குவரத்திற்கேலாயக்கில்லாத சாலைகளாக இவை மாறியுள்ளன.
கடந்த இரு நாட்களாக நின்றிருந்த மழை நேற்று இரவு முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையின்புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது.
இன்றும் விட்டுவிட்டு கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் முழுவதும் இதே நிலை தான்உள்ளது.
இந்த கன மழை மேலும் ஒரு நாள் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம்ஏரிகளில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது.
தற்போது நான்கு ஏரிகளிலும் சேர்த்து 3,145 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இந்த அணைகளின் மொத்த கொள்அளவு 11,057 மில்லியன் கன அடியாகும்.
மேட்டூர் நிலவரம்:
தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று காலை முதல் சிறிது அதிகரித்துள்ளது.
இன்று அணையின் நீர் மட்டம் 63.56 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,599 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின்மொத்த உயரம் 120 அடியாகும். கர்நாடகம் நீர் விடுவதை நிறுத்திவிட்டபோதிலும் மழை காரணமாக இப்போது பாதி அணைநிரம்பிவிட்டது.
-->












Click it and Unblock the Notifications