நெடுமாறன் மீதான வழக்கு: 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
திருச்செந்தூர்:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மீதான வழக்கின்அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருச்செந்தூரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நெடுமாறன்பேசியதாக போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இதன் விசாரணை நேற்று நடந்தது. இதையொட்டி கடலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த நெடுமாறன்திருச்செந்தூருக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார்.
அப்போது சப் இன்ஸ்பெக்டர் அல்லாகாத்தானிடம் நெடுமாறனின் வக்கீல் சுப்புரத்தினம் விசாரணை நடத்தினார்.
இதன் முடிவில் அடுத்தகட்ட விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி பால்துரைஅறிவித்தார்.
விசாரணைக்குப் பிறகு நெடுமாறன் மீண்டும் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-->












Click it and Unblock the Notifications