சென்னையில் இந்திய-ஜப்பான் கடலோர காவற்படையினர் கூட்டுப் பயிற்சி
சென்னை:
சென்னை அருகே வங்காள விரிகுடாவில் இந்திய மற்றும் ஜப்பான் கடலோரக் காவற்படையினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் ஜப்பானின் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த "யாஷிமா" என்ற கப்பல் சென்னை துறைமுகம் வந்துசேர்ந்தது.
அதில் வந்த ஜப்பான் கடலோர காவற்படையினரும், இந்தியக் கடலோர காவற்படையினரும் இணைந்துபயிற்சிகளை நடத்தினர்.
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நடுக்கடலில் தூக்கி எறியப்பட்ட இரண்டு கப்பல் மாலுமிகளை"யாஷிமா"விலிருந்து புறப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் எவ்வாறு கயிறு மூலம் கட்டி மீட்கிறது என்ற பயிற்சி செய்துகாட்டப்பட்டது.
இந்தப் பயிற்சி நடவடிக்கைக்கான அனைத்து வசதிகளையும் இந்தியக் கடலோரக் காவற்படை செய்து கொடுத்தது.
மொத்தம் மூன்று பயிற்சிகள் வரை மேற்கொள்ளப்படவிருந்தன. ஆனால் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல்சின்னம் காரணமாக ஒரு பயிற்சி மட்டுமே நடத்தப்பட்டது.
-->