For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: ராஜபாளையம் அருகே பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே அதிமுக பிரமுகர் ஒருவரை 8 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்ததைத்தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ்.

சமீபத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவின் போது ராஜபாளையத்தைச் சேர்ந்த சிலருக்கும் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்த சிலருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவர்அரிவாளால் வெட்டப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜபாளையம் கும்பல் நேற்று மாலை கிருஷ்ணாபுரத்திற்குச் சென்று கடும் ரகளையில்ஈடுபட்டது.

அரிவாள், கத்தி, ஈட்டி போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாபுரம்மக்களைத் தாக்க ஆரம்பித்தனர்.

இதில் செல்வராஜ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து கிருஷ்ணாபுரத்தில் கடும் பதற்றம்ஏற்பட்டது. அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

இதையடுத்து கிருஷ்ணாபுரத்தில் ஏராளமான ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும்அப்பகுதி முழுவதிலும் மயான அமைதி நிலவியது.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிலரைக் கைது செய்தும்விசாரித்து வருகின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X