பெரமணல்லூர் அருகே கார்-லாரி மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரமணல்லூர்::
பெரமணல்லூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த 3 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலத்திலிருந்து திருப்பூர் நோக்கு நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
இரவு சுமார் 7.30 மணிக்கு பெரமணல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே படு வேகத்துடன் வந்துகொண்டிருந்த ஒரு லாரி இந்தக் கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர்மருத்தவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
காரில் பயணம் செய்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் திருப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications