திருவண்ணாமலை கோவில் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
சென்னை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தன் கைவசம்எடுத்துக் கொள்ளப் போவதை எதிர்த்து தமிழக அரசு இன்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலை தன் வசம் எடுத்துக் கொண்டு அதன் பராமரிப்புப் பணிகளைத் தானே கவனித்துக்கொள்ளப் போவதாக மத்திய தொல்பொருள் துறை அறிவித்தது.
இதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஞ்சி சங்கராச்சாரியார், தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரும் தொல்பொருள்துறையின் முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தமிழக இந்து அறநிலையத் துறையின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய அரசுக்குச் சொந்தமான தொல்பொருள் துறையின் பொறுப்பில்ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-->