5 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
சென்னை:
தமிழக அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 5 பேரும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ஏ. அன்வர் ராஜா, ஆர். வைத்திலிங்கம், ஏ. பாப்பா சுந்தரம், பி.வி. தாமோதரன் மற்றும் ஆர். வடிவேல் ஆகிய ஐந்துபேரும் தான் சமீபத்தில் அமைச்சர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் அன்வர் ராஜாவும் வைத்திலிங்கமும் ஏற்கனவே அமைச்சர் பதவிகளில் இருந்து தூக்கிஎறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய அமைச்சர்கள் ஐந்து பேரும் இன்று காலை 11.15 மணிக்கு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகள் மற்றும் சில அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட பி.தனபால் மற்றும் வா.து. நடராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றொருவரான கே.சுதர்சனம் மட்டும் கலந்து கொண்டார்.
-->