மதுரையில் பெண் போலீஸ் அதிகாரியின் கணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் முத்துலட்சுமி. இவரது கணவர் முத்துப்பாண்டி.
இவர்களது வீடு தாசில்தார் நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ளது.
வீட்டுக்கு அருகே உள்ள மரம் ஒன்றில் முத்துப்பாண்டி பிணமாக காணப்பட்டார். குடும்பத்தகராறு காரணமாகஅவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications