டான்சி நில ஒப்படைப்பு: சசிகலா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
டான்சி நிலத்தை முடக்கி வைத்துள்ள உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு கோரியுள்ள சசிகலாவின் மனு மீதானதீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டான்சி நிலத்தை அரசிடமே ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், எனவே டான்சி நிலத்தை முடக்கி வைத்துள்ளநீதிமன்ற உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு சசிகலா தரப்பில் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி சிங்காரவேலன் விசாரித்து வந்தார். இது தொடர்பான சில கேள்விகளை அவர்கேட்டிருந்தார்.
இதற்கான விளக்கத்தை நீதிமன்றத்தைத் தாக்கல் செய்த சசிகலாவின் வக்கீல் வாதாடுகையில்,
டான்சி வழக்கு தொடர்பான அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் கூட, நிலத்தை முடக்கிவைத்துள்ளதற்கான உத்தரவை விலக்கி உத்தரவிட சிறுவழக்குகள் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
மேலும், டான்சி நிலத்தை மறுபடியும் டான்சி நிறுவனத்திடமே திருப்பித் தருவதால் எனது கட்சிக்காரருக்கு ரூ.3கோடி நஷ்டம் ஏற்படும்.
இருந்தாலும் தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் டான்சி நிறுவனத்திடமே இந்த நிலத்தை திருப்பித் தருவதற்குஎனது கட்சிக்காரர் விருப்பமாக உள்ளார் என்று வாதிட்டார்.
இந்த வாதத்திற்குப் பிறகு சசிகலாவின் மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதிசிங்காரவேலன்.
-->