கடமை தவறிய மாநகராட்சி டாக்டர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல் கடமையைத் தட்டிக் கழித்த டாக்டர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
சென்னை நகரில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. பல நடமாடும்மருத்துவமனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் நோயாளிகளைஅலைக்கழித்ததாக மாநகராட்சி உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெகதீசனை, மாநகராட்சி ஆணையர்கலைவாணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
நீர் சூழ்ந்த பகுதிகளுக்குச் செல்லாமல் பல டாக்டர்கள் தவிர்த்து வருகின்றனர். மேலும் இது இலவச சிகிச்சைஎன்பதால் சிடுசிடுத்தவாரே சிகிச்சை தந்து வருகின்றனர். இந் நிலையில் கடமை தவறிய டாக்டர் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications