எய்ட்ஸ் நோயாளியை புறக்கணித்த அரசு மருத்துவமனை
தர்மபுரி:
இந்தியாவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கு 100 மில்லியன் டாலர் பணத்தை வாரித் தந்த பில் கேட்ஸ் இந்தசெய்தியைக் கேட்டால் மனம் நொந்து போய் விடுவார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு நபர் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் கடந்த 5 நாட்களாகபடுத்துக் கிடந்தார். இவரைப் பார்த்த சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அவருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தைச் சேர்ந்த சிலஅதிகாரிகள், அரசு மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு எய்ட்ஸ் நோய் தாக்கிய அந்த நபரை எடுத்துச்சென்றுசிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு, மருத்துவமனையில் அனுமதித்தால்தான் மருத்துவம் பார்ப்போம், ரோட்டில் கிடப்பவர்களை மீட்பதுஎங்களது வேலை அல்ல என்று பதில் கூறியுள்ளனர் சில டாக்டர்கள்.
இதைக் கேட்டு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அத்தோடு நிற்கவில்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள். எய்ஸ்ட் தாக்கிய நபரை, ஏதாவது தொண்டுநிறுவனத்திலோ அல்லது நகராட்சியிடமோ ஒப்படைத்து விடுமாறு ஈவு இரக்கமின்றிக் கூறியுள்ளனர்.
இந் நிலையில் அந்த மனிதனைக் காப்பாற்ற ஊரக வளர்ச்சிக் கமிட்டி என்ற தொண்டு நிறுவனம் முன்வந்தது.ஆம்புலன்ஸ் தருமாறு அரசு மருத்துவமனையை அந்த அமைப்பு அணுகியபோது, கண்காணிப்பாளரிடம் அனுமதிபெற்று வாருங்கள் என்று கைகாட்டியுள்ளனர். ஆனால் கண்காணிப்பாளர் பணிக்கே வரவில்லை.
இதையடுத்து உள்ளூர் போலீஸ் நிலையத்தை அணுகியபோது, இது எங்க வேலையா என்று பதில் கூறியுள்ளனர்.
இதையடுத்து திகைத்து நின்ற கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் கை கொடுத்தார்.அவரது ஆட்டோவில் எய்ட்ஸ் தாக்கிய நபரை போட்டுக் கொண்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அவரை தாங்கள் கவனித்துக் கொள்வதாக தொண்டு நிறுவனம் உறுதியளித்ததால் மருத்துவனை அதிகாரிகள் அந்தநோயாளியை மருத்துமனையில் அனுமதித்தனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறையினரின் இந்த அலட்சியப் போக்கு குறித்து மாவட்ட நிர்வாகம்கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருப்பதாகவும்தெரிகிறது.
கலெக்டர் அலுவலக ஊழியர்களாலேயே அரசு மருத்துவமனையிலும் போலீஸ் நிலையத்திலும் காரியம்ஆகவில்லை என்றால் சாதாரண பொது மக்களின் நிலை என்ன?
-->
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications