திட்டு.. திட்டு.. திட்டு..: இது பன்னீர் ஸ்டைல்
சென்னை:
பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெற்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியதை எதிர்க் கட்சித் கட்சித்தலைவர்கள் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் விமர்சித்து வருகின்றனர் என பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம்கூறியுள்ளார்.
இது தொடர்பாக பன்னீர் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்தத் தலைவர்களுக்கு கெளரவமாக நடந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. ஜெயலலிதா மீது வெறுப்பை உமிழ்வது தான்இவர்களுக்கு வேலையே. உச்ச நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா. அதனால் தான் அந்தமன்றம் உத்தரவிட்டவுடன தனது கருத்துக்களை வாபஸ் பெற்று உடனே கடிதம் எழுதினார்.
கருணாநிதி, கிருஷ்ணாவுக்கு திட்டு:
ஜெயலலிதா எப்போதுமே யாருக்கு எதிராகவும் மிக மோசமான வார்த்தைகளை ஜெயலலிதா பயன்படுத்தியதே இல்லை. ஆனால்,கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் திமுக தலைவர் கருணாநிதியும் தான் மிக மோசமாக பேசி வருகின்றனர். அது அவர்களின்வழக்கமாகிவிட்டது.
ஜெயலலிதாவை எதிர்ப்பதை மட்டுமே வேலையாகக் கொண்டுள்ள கருணாநிதி காவிரி விவகாரத்தில் என்ன நிலை எடுத்தார். மத்தியஅரசை அவர் எந்த வகையிலாவது நிர்பந்தித்தாரா? தனது கட்சியினரை மத்திய அமைச்சர்களாக உட்கார வைத்துள்ள கருணாநிதி தமிழகவிவசாயிகளுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இளங்கோவனுக்கு திட்டு:
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திடீரென முழித்துக் கொண்டது மாதிரி செயல்படுகிறது. கர்நாடக காங்கிரஸ் முதல்வர்கிருஷ்ணாவுக்கு எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்காத இளங்கோவன் போன்றவர்கள் இப்போது மட்டும் வாயைத் திறப்பது ஏன்?
ராமதாசுக்கு திட்டு:
காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா மனம் போன போக்கில் செயல்படுவதாகக் கூறும் பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு முதல்வர் கூட்டியஅனைத்துக் கட்சிக் கூட்டம் மறந்து போனது ஏன் என்று தெரியவில்லை.
இவ்வாறு எல்லோரையும் பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் திட்டியுள்ளார்.
-->