காவிரியை காத்த வள்ளியப்பன்
சென்னை:
காவிரி ஆற்றில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு வளர்ந்திருந்த ஆமணக்குச் செடிகளை தனி ஒரு மனிதனாய்செயல்பட்டு அகற்றி, காவிரி நீர் செல்ல வழி வகுத்த விவசாயி வள்ளியப்பனுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 3லட்சம் வழங்கி, அவரது பொதுச் சேவை மனப்பான்மையைப் பாராட்டினார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வள்ளியப்பன். இவர்காவிரி வடகரைப் பகுதியில் குடியிருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மணல் பகுதியில் ஏராளமான அளவுக்கு காட்டாமணக்குச் செடிகள் வளர்ந்துதண்ணீர் செல்ல பெரும் தடையாக இருந்து வந்தது. இதைப் பார்த்த வள்ளியப்பனுக்கு அதை அகற்ற வேண்டும்என்ற நினைப்பு வந்தது.
இதற்காக அரசின் உதவியையோ அல்லது தன் ஊர்க்காரர்கள் உதவியையோ கோரவில்லை. தானே தனியாகசெயலில் இறங்கினார்.
தினசரி அதிகாலை ஆற்றுக்குக் கிளம்புவார். அங்கு வளர்ந்து கிடக்கும் காட்டாமணக்குச் செடிகளை வெட்டிஅகற்றத் தொடங்குவார். சூரியன் அஸ்தமனமான பிறகுதான் வீட்டுக்கு வருவார்.
இப்படியே தொடர்ந்து ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, 7 மாதம் இடைவிடாமல் உழைத்து, காட்டாமணக்குச்செடிகளை முற்றிலும் அகற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தொலைவுக்கு செடிகளை அகற்றி காவிரி தாராளமாக செல்ல வழி வகுத்துள்ளார்.
தனி மனிதராக, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பொதுச் சேவையை புரிந்துள்ள வள்ளியப்பன் குறித்துமுதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வளவு பெரிய செயலைச் செய்த வள்ளியப்பன் விவசாயக் கூலி தான். காவிரி வறண்டதால் விவசாயவேலைகளும் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்.
மிகச் சிறிய குடிசையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு உதவ ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அவரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டி ரூ. 3 லட்சம் வழங்கிபாராட்டினார்.
இந்த எதிர்பாராத பாராட்டு மற்றும் பரிசால் மனம் நெகிழ்ந்து போயுள்ளார் பெரியவர் வள்ளியப்பன்.
29ல் காவிரி ஆணைய கூட்டம்:
இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வரும் 29ம் தேதி பிரதமர் வாஜ்பாய்தலைமையிலான காவிரி ஆணையம் கூடவுள்ளது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அர்ஜுன் சேத்திகூறினார்.
அதற்கு முன்னதாகவே வரும் 25ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழுவும் கூடவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-->
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications