காவிரியை காத்த வள்ளியப்பன்
சென்னை:
காவிரி ஆற்றில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு வளர்ந்திருந்த ஆமணக்குச் செடிகளை தனி ஒரு மனிதனாய்செயல்பட்டு அகற்றி, காவிரி நீர் செல்ல வழி வகுத்த விவசாயி வள்ளியப்பனுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 3லட்சம் வழங்கி, அவரது பொதுச் சேவை மனப்பான்மையைப் பாராட்டினார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வள்ளியப்பன். இவர்காவிரி வடகரைப் பகுதியில் குடியிருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மணல் பகுதியில் ஏராளமான அளவுக்கு காட்டாமணக்குச் செடிகள் வளர்ந்துதண்ணீர் செல்ல பெரும் தடையாக இருந்து வந்தது. இதைப் பார்த்த வள்ளியப்பனுக்கு அதை அகற்ற வேண்டும்என்ற நினைப்பு வந்தது.
இதற்காக அரசின் உதவியையோ அல்லது தன் ஊர்க்காரர்கள் உதவியையோ கோரவில்லை. தானே தனியாகசெயலில் இறங்கினார்.
தினசரி அதிகாலை ஆற்றுக்குக் கிளம்புவார். அங்கு வளர்ந்து கிடக்கும் காட்டாமணக்குச் செடிகளை வெட்டிஅகற்றத் தொடங்குவார். சூரியன் அஸ்தமனமான பிறகுதான் வீட்டுக்கு வருவார்.
இப்படியே தொடர்ந்து ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, 7 மாதம் இடைவிடாமல் உழைத்து, காட்டாமணக்குச்செடிகளை முற்றிலும் அகற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தொலைவுக்கு செடிகளை அகற்றி காவிரி தாராளமாக செல்ல வழி வகுத்துள்ளார்.
தனி மனிதராக, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பொதுச் சேவையை புரிந்துள்ள வள்ளியப்பன் குறித்துமுதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வளவு பெரிய செயலைச் செய்த வள்ளியப்பன் விவசாயக் கூலி தான். காவிரி வறண்டதால் விவசாயவேலைகளும் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்.
மிகச் சிறிய குடிசையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு உதவ ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அவரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டி ரூ. 3 லட்சம் வழங்கிபாராட்டினார்.
இந்த எதிர்பாராத பாராட்டு மற்றும் பரிசால் மனம் நெகிழ்ந்து போயுள்ளார் பெரியவர் வள்ளியப்பன்.
29ல் காவிரி ஆணைய கூட்டம்:
இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வரும் 29ம் தேதி பிரதமர் வாஜ்பாய்தலைமையிலான காவிரி ஆணையம் கூடவுள்ளது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அர்ஜுன் சேத்திகூறினார்.
அதற்கு முன்னதாகவே வரும் 25ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழுவும் கூடவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-->
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications