Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரியை காத்த வள்ளியப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி ஆற்றில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு வளர்ந்திருந்த ஆமணக்குச் செடிகளை தனி ஒரு மனிதனாய்செயல்பட்டு அகற்றி, காவிரி நீர் செல்ல வழி வகுத்த விவசாயி வள்ளியப்பனுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 3லட்சம் வழங்கி, அவரது பொதுச் சேவை மனப்பான்மையைப் பாராட்டினார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வள்ளியப்பன். இவர்காவிரி வடகரைப் பகுதியில் குடியிருக்கிறார்.

காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மணல் பகுதியில் ஏராளமான அளவுக்கு காட்டாமணக்குச் செடிகள் வளர்ந்துதண்ணீர் செல்ல பெரும் தடையாக இருந்து வந்தது. இதைப் பார்த்த வள்ளியப்பனுக்கு அதை அகற்ற வேண்டும்என்ற நினைப்பு வந்தது.

இதற்காக அரசின் உதவியையோ அல்லது தன் ஊர்க்காரர்கள் உதவியையோ கோரவில்லை. தானே தனியாகசெயலில் இறங்கினார்.

Valliappan&Jayalalithaaதினசரி அதிகாலை ஆற்றுக்குக் கிளம்புவார். அங்கு வளர்ந்து கிடக்கும் காட்டாமணக்குச் செடிகளை வெட்டிஅகற்றத் தொடங்குவார். சூரியன் அஸ்தமனமான பிறகுதான் வீட்டுக்கு வருவார்.

இப்படியே தொடர்ந்து ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, 7 மாதம் இடைவிடாமல் உழைத்து, காட்டாமணக்குச்செடிகளை முற்றிலும் அகற்றியுள்ளார்.

கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தொலைவுக்கு செடிகளை அகற்றி காவிரி தாராளமாக செல்ல வழி வகுத்துள்ளார்.

தனி மனிதராக, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பொதுச் சேவையை புரிந்துள்ள வள்ளியப்பன் குறித்துமுதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வளவு பெரிய செயலைச் செய்த வள்ளியப்பன் விவசாயக் கூலி தான். காவிரி வறண்டதால் விவசாயவேலைகளும் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்.

மிகச் சிறிய குடிசையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு உதவ ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அவரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டி ரூ. 3 லட்சம் வழங்கிபாராட்டினார்.

இந்த எதிர்பாராத பாராட்டு மற்றும் பரிசால் மனம் நெகிழ்ந்து போயுள்ளார் பெரியவர் வள்ளியப்பன்.

29ல் காவிரி ஆணைய கூட்டம்:

இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வரும் 29ம் தேதி பிரதமர் வாஜ்பாய்தலைமையிலான காவிரி ஆணையம் கூடவுள்ளது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அர்ஜுன் சேத்திகூறினார்.

அதற்கு முன்னதாகவே வரும் 25ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழுவும் கூடவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+