மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிராக மாநாடு
சென்னை:
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வரும் 21ம் தேதி சென்னையில்கண்டனக் மாநாடு நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது.
மாநில செயலாளர் வரதாரஜன் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மத மோதல்களுக்கு வழி வகுக்கும். ஜனநாயகத்திற்கே பெரும் நாசத்தைஏற்படுத்தி விடும். இந்தக் கடுமையான சட்டத்தால், மத நல்லிணக்கத்திற்கு பெரும் குந்தகம் ஏற்படும்.
எனவே இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை கண்டித்து வரும் 21ம் தேதிசென்னையில் கண்டன மாநாடு நடைபெறும்.
போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு முயற்சித்து வருகிறது. அப்படி நடந்தால்லஞ்ச, லாவண்யம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் நலன் பாதிக்கப்படும்.
ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 26ம் தேதி சென்னையில்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் வரதராஜன்.
-->












Click it and Unblock the Notifications