சங்கரன்கோவிலை கலக்கும் வயிற்றுப் போக்கு: 2 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பகுதியில் திடீரென்று ஏற்பட்டுள்ள வயிற்றுப் போக்கு காரணமாக 2 பெண்கள் பலியாகினர்.இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே கலப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புவயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ராமாயி என்ற 73 வயதுப் பெண்ணும் வயிற்றுப் போக்கு காரணமாக உயிரிழந்தார்.
இவர்களைத் தவிர மேலும் 10 பேர் வயிற்றுப் போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வயிற்றுப் போக்கினால் இரு பெண்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பீதியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் செல்வகுமாரி தலைமையிலான மருத்துவர் குழு சங்கரன்கோவில் பகுதியில் முகாமிட்டு மருந்துகள்கொடுத்து வருகிறது.
-->












Click it and Unblock the Notifications