சென்னை: பாலத்தின் அடியில் கிடந்த ஆண் குழந்தையின் பிணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஒரு பாலத்தின் அடியில் பிறந்து ஒரு மாதமே நிரம்பிய ஒரு ஆண் குழந்தை பிணமாகக்கண்டெடுக்கப்பட்டது.
எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.) அலுவலகத்தின் அருகே உள்ள ஒருபாலத்தின் அடியில் இன்று காலை இந்தக் குழந்தையின் பிணம் கிடந்தது.
தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீசார் விரைந்து சென்று அந்தக் குழந்தையின் உடலைக் கைப்பற்றி, பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தக் குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிரவிசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications