For Daily Alerts
Just In
அந்தமானுக்கு கடத்தப்படவிருந்த 300 அரிசி மூட்டைகள் பறிமுதல்
சென்னை:
சென்னையிலிருந்து அந்தமானுக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த 300 அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல்செய்தனர்.
சென்னை-ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒரு அரிசிக் கிடங்கில் தமிழக குடியுரிமைப் பொருள் வினியோகத்துறையைச் சேர்ந்த சிறப்பு சி.ஐ.டி. போலீசார் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தமானுக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த ரூ.2.43 லட்சம் மதிப்புள்ள 300 அரிசி மூட்டைகள் அங்குவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், அவற்றைக் கொண்டு செல்வதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டிருந்தலாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அந்த அரிசிக் கிடங்கின் உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
-->
Story first published: Friday, November 22, 2002, 5:30 [IST]